Tuesday, March 8, 2011

முதல் அமைப்பு கூட்டம்


புதுச்சேரி மார்ச் 2
மாற்றுதிறனாளிகளின் கோரிக்கைளை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச்செய்து நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி அனைத்து வகைமாற்றுதிறனாளிகள் உரிமைக்களுக்கான கூட்டமைபு வலியுருத்தியுள்ளது.
புதுச்சேரி அனைத்து வகைமாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்கள் உரிமைக்களுக்கான கூட்டமைபின் முதல் அமைப்பு கூட்டம் வேங்கட்டாநகர் புதுவைதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ் மாநில அமைப்பாளர் நம்புராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.டிஒய்எப்கஜ பிரதேச பொருளாளர் பிரபுராஜ் வாழ்த்தி பேசினார்.இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் புதுச்சேரி தலைவராக ராஜாங்கம்,செயலாளராக சரவணன்,பொருளாளராக நக்கிரன்,மற்றும் நிர்வாகிகளாக மாயவன்,வடிவேல்,முருகன்,ஜெகன், உள்ளிட்டோர் தேர்வுசெய்யப்பட்டனர். மேலும் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்பில் 3சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.மாதம் வழங்கப்படும் =ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக வழங்கவேண்டும்.இக்கோரிக்கைகளை வரும் சட்டமன்றதேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் செய்ய வேண்டும். என்பன தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.இக்கூட்டத்தில் திரளான மாற்றுதிறனாளிகள் பங்கேற்றனர்.
படம் உள்ளது.

No comments:

Post a Comment